Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ADDED : மே 14, 2025 05:12 AM


Google News
கோயிலில் திருட்டு

மேலுார்: தெற்குத்தெரு மலை மந்தை வீரன் சுவாமி கோயில் பூஜாரி தவவீரணன் 62. நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்த போது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, குடத்தில் வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.

வீட்டில் நகை திருட்டு

திருமங்கலம்: பாரைபத்தியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தோடு மதுரை சித்திரை திருவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வைர மோதிரம் மற்றும் 8 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன. கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us