ADDED : மார் 25, 2025 04:40 AM

மதுரை: மதுரை கடச்சனேந்தல் சேகர். கூலித் தொழிலாளி. இவர் ஒரு வீட்டிற்கு கடன் தொகையை வசூலிக்கச் சென்றார். பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். சிறுமியான அவர்களின் மகள் தனியாக இருந்தார். அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சேகர் மீது அப்பன் திருப்பதி போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் 2018 ல் வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமாரவேல்: சேகருக்கு ஆயுள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.