ADDED : அக் 02, 2025 03:20 AM
மதுரை : மதுரை அழகப்பன் நகரில் மரங்களை வெட்டியதால் தற்கொலை செய்துக்கொண்ட 'மரங்களின் காதலன்' என்றழைக்கப்பட்ட ஜெகதீஷ்குமார் நினைவாக மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு நடந்தது.
பசுமையாளர்கள் குழு சார்பில் 30 நாட்கள் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவது என தீர்மானிக்கப்பட்டது. 2ம் நாள் நிகழ்வாக 'யானைமலை கிரீன்' பவுண்டேஷன் சார்பில் வேப்ப மரக்கன்று, ஒத்தக்கடை அழகப்பன் நகரில் நடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமை ஆசிரியர் தென்னவன், பிரபு, ராகேஷ், பாலமுருகன், ஜெயபாலன், பத்மநாபன், சேகர் பங்கேற்றனர்.


