Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு

ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு

ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு

ஜன.10 குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு

ADDED : ஜன 08, 2025 05:32 AM


Google News
சோழவந்தான் : குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் ஜன.,10 வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அதிகாலை 5:30 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளுவார். பின் காலை 9:30 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு குருவித்துறை கிராம வீதி உலா நடக்கிறது. கன்னியப்ப முதலியார் மண்டகப்படியில் திருமஞ்சனம் பூஜை நடைபெறும். ஜன.11 காலை 7:35 மணிக்கு மேல் கோயில் புறப்பாடு நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், வைகுண்ட ஏகாதசி விழா கமிட்டி, கிராமத்தினர் செய்கின்றனர்.

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us