Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ADDED : ஜன 10, 2024 06:29 AM


Google News
பாலம் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்

மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் ஏ.வி. பாலத்தின் முகப்பில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவதால் வாகன நெரிசலுடன் விபத்தும் நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -

- பாஸ்கர், விஸ்வநாதபுரம்.

தெரு நாய்கள் தொல்லை

மதுரை எச்.எம்.எஸ். காலனி ஆனந்த நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் வெளியே செல்லமுடியவில்லை. டூவீலரில் செல்வோர்களை துரத்துகிறது.மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். -

- கவிதா, எச்.எம்.எஸ். காலனி.

சிக்னலில் திருநங்கைகள் வசூல்

மதுரை முனிச்சாலை, சிந்தாமணி, அரசரடி, மானகிரி உட்பட நகரின் சில சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது திருநங்கைகள் பணம் கேட்கிறார்கள். இதனால் சிக்னல் கிடைத்தும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. -

- வெங்கடேஸ்வரி, அண்ணாநகர்.

ரோடுகளில் மாடுகள்

மதுரை அண்ணாநகர் முதல் செக்ஷன் ஆபீஸ் வரையிலான பகுதியில் ரோட்டில் மாடுகள் திரிவதால் இரவில் அடிக்கடி விபத்து நடக்கிறது. -

- மகாராஜன், முந்திரிதோப்பு.

குடிநீர் வீணாகிறது

திருமங்கலம் பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் திறந்துவிடும் போது ரோட்டில் குடிநீர் ஆறுபோல் செல்கிறது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -

- ராஜி, திருமங்கலம்.

மேம்பாலங்களில் மணல் குவிப்பு

மதுரையில் பாலங்களில்சேரும் மணலை குவித்து வைத்து அள்ளுவதில்லை. இதனால் மீண்டும் பரவி விடுகிறது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

- மோகன், முனிச்சாலை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us