Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அலுவலகம் முற்றுகை

அலுவலகம் முற்றுகை

அலுவலகம் முற்றுகை

அலுவலகம் முற்றுகை

ADDED : மே 16, 2025 03:24 AM


Google News
உசிலம்பட்டி: வகுரணி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆண்டிப்பட்டி- சேடபட்டி- உசிலம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு குழாய் பழுதடைந்ததால் 3 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

குடிநீர் இணைப்பை சரிசெய்யக்கோரி தொடர்ந்து முறையிட்டு வந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழுதடைந்த பகுதியை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சமரசம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us