ADDED : ஜூன் 06, 2025 02:53 AM

திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டியிலிருந்து நிலையூர் செல்லும் மெயின் ரோட்டில் மாநகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திர நிலையத்தில் இருந்து தினமும் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் குடிநீர் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
3 ஆண்டுகளாக இந்நிலையம் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் தனியாரிடம் குடம் ஒன்று ரூ. 13 விலை கொடுத்து மக்கள் குடிநீர் வாங்குகின்றனர். அங்கிருந்த 2 தொட்டிகளையும் காணவில்லை. குடிநீர் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.