Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்

நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்

நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்

நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்

ADDED : ஜூன் 25, 2025 01:04 AM


Google News
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில்நோயாளிகளின் வலிகளை போக்க நவீன வலி நிவாரண இயந்திரம் கொள்முதல் செய்ய மயக்கவியல் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அறுவை சிகிச்சை செய்யும் நேரம், நோயாளிகளுக்கு இணை நோய்கள் உள்ளதா போன்றவற்றை கணக்கிட்டு தேவையான அளவு மயக்க மருந்து கொடுத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ய இத்துறை டாக்டர்கள் உதவுவர்.

மதுரை அரசு மருத்துவமனையில் இதற்கென பிரத்யேக துறை இயங்கி வருகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிக்கு வலி நிவாரணி வழங்கப்படுவது உண்டு. குறிப்பாக புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரணி அவசியமாக உள்ளது. இதற்கென நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய அரசுக்கு மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us