ADDED : ஜூலை 01, 2025 02:56 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., மாநில இளைஞரணி மதுரை பெருங்கோட்டம் சார்பில் மாதிரி பார்லிமென்ட் விவாத கூட்டம் நடந்தது. பொறுப்பாளர் வெற்றிவேல் முருகன் தலைமை வகித்தார். மதுரை பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், பிரசார பிரிவு செயலாளர் ராஜா பங்கேற்றனர்.
காங்., அமல்படுத்திய நெருக்கடிநிலையின் 50வது ஆண்டு இருண்ட அத்தியாயம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.