ADDED : ஜூலை 02, 2025 01:37 AM
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 5 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் பொன்னி அறிமுக உரையாற்றினார். மாணவி சுவாதிகா சுனோ வரவேற்றார்.
முதலாண்டு மாணவர்களை அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் வரவேற்று பேசினர். மூன்றாம் ஆண்டு மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்றனர். மாணவி சாருகா சுனோ நன்றி கூறினார்.