ADDED : மே 31, 2025 05:00 AM
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் செல்லமுத்து அறக்கட்டளை, சென்னை மிஷின் நிறுவனம் சார்பில் அண்ணா மாளிகை, ஜான்சிராணி பூங்காவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், உணவகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தியாகராஜன் தலைமையில் கையெழுத்தானது.
மேயர் இந்திராணி பொன்வசந்த் முன்னிலை வகித்தார். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர்டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், கமிஷனர் சித்ரா ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். தலைமை பொறியாளர் பாபு, துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி ஆகியோர் உடன்இருந்தனர்.