/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் மதுரை தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி துபாயிலும் தமிழர்களிடம் மோசடி எனத்தகவல் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் மதுரை தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி துபாயிலும் தமிழர்களிடம் மோசடி எனத்தகவல்
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் மதுரை தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி துபாயிலும் தமிழர்களிடம் மோசடி எனத்தகவல்
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் மதுரை தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி துபாயிலும் தமிழர்களிடம் மோசடி எனத்தகவல்
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் மதுரை தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி துபாயிலும் தமிழர்களிடம் மோசடி எனத்தகவல்
ADDED : செப் 21, 2025 05:34 AM

மதுரை:மதுரை தொழிலதிபரிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி ரூ.1.79 கோடி மோசடி செய்த நபர் சிங்கப்பூரில் தலைமறைவாக உள்ளார். இதற்கு முன் துபாயில் பதுங்கியிருந்தபோது அங்குள்ள தமிழர்களிடமும் ஆசைவார்த்தை கூறி ரூ.பல கோடி மோசடி செய்தததால் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் மூலம் மதுரை சுந்தரராஜபுரம் பாலசுப்பிரமணியன், வில்லாபுரம் சரவணகுமார் அறிமுகமாயினர். இருவரும் பங்குதாரராக இருந்து 'காண்டி டிரைனர்ஸ்' என்ற பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தினர். ஆரம்பத்தில் ரியல் எஸ்டேட் தொழில் ரீதியாக கொடுக்கல், வாங்கல் சிவக்குமாருக்கும், இவர்களுக்கும் இருந்தது. பிறகு வெளிநாட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஆரம்பத்தில் ரூ.10 லட்சம் பெற்றனர். ஒன்றரை மாதத்தில் அதற்கான லாபமாக ரூ.2.30 லட்சம் தந்து நம்ப வைத்தனர். பிறகு ரூ.23 லட்சம் பெற்று அதற்கு பங்குச்சந்தை லாபம் எனக்கூறி ரூ.12 லட்சம் தந்தனர்.
இதனால் தங்களை முழுமையாக நம்பிய சிவக்குமாரிடம் 'பங்குச்சந்தை இப்போது ஏற்றத்தில் உள்ளது.
முதலீடு செய்ய ரூ.ஒரு கோடி தேவைப்படுகிறது. இருமடங்கு லாபம் கிடைக்கும். கொடுக்கும் பணத்திற்கு ஈடாக எங்களது பினாமிகளின் சொத்து ஆவணங்களை தருகிறோம்' எனக்கூறி சில ஆவணங்களை கொடுத்து மொத்தம் ரூ.1.79 கோடி பெற்றனர்.
இந்நிலையில் 'காண்டி கேப்பிடல்ஸ்' என்ற பெயரில் போலி இணையதளத்தை ஆரம்பித்து அதில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தனர்.
இதுதொடர்பாக ரூ.1.22 கோடி மோசடிக்கு ஆளான சதீஷ்குமார் என்பவரின் புகாரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். சரவணகுமார் துபாய்க்கு தப்பிச்சென்றார்.
இதையறிந்த சிவக்குமார், விசாரித்தபோது தன்னையும் அவர்கள் மோசடி செய்ததை அறிந்தார். இதுகுறித்த புகாரில் பாலசுப்பிரமணியன், சரவணகுமார் உட்பட 8 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'சதீஷ்குமார் புகாரில் ஏற்கனவே கைதாகி ஜாமினில் உள்ள பாலசுப்பிரமணியனை மீண்டும் கைது செய்து விசாரிக்க உள்ளோம். துபாயில் தலைமறைவாக இருந்த சரவணகுமார், அங்குள்ள தமிழர்களிடமும் இதே போல் ரூ.பல கோடி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் பதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றனர்.