Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து சுவாமிகள் மதுரைக்கு புறப்பாடு

குன்றத்து சுவாமிகள் மதுரைக்கு புறப்பாடு

குன்றத்து சுவாமிகள் மதுரைக்கு புறப்பாடு

குன்றத்து சுவாமிகள் மதுரைக்கு புறப்பாடு

ADDED : செப் 03, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம் : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டியராஜாவாக கலந்து கொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து நேற்று புறப்படாகினார்.

கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பணசுவாமிக்கு பூஜை முடிந்து உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.

தீபாராதனைக்கு பின்பு சர்வ அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வழி நெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாலித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றனர்.

அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு நரியை பரியாக்கும் நிகழ்ச்சியில் குன்றத்து சுவாமிகள் பங்கேற்றனர்.

செப். 6ல் ஆடி வீதிகளில் உலா நிகழ்ச்சி முடிந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியா விடையிடம், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சி நடைபெறும். செப். 7ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு, பூஜை வழக்கம் போல் நடக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us