Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காப்பு கட்டுதலுடன் துவங்கியது கந்தசஷ்டி விழா; குன்றத்தில் குவியும் பக்தர்கள்

காப்பு கட்டுதலுடன் துவங்கியது கந்தசஷ்டி விழா; குன்றத்தில் குவியும் பக்தர்கள்

காப்பு கட்டுதலுடன் துவங்கியது கந்தசஷ்டி விழா; குன்றத்தில் குவியும் பக்தர்கள்

காப்பு கட்டுதலுடன் துவங்கியது கந்தசஷ்டி விழா; குன்றத்தில் குவியும் பக்தர்கள்

ADDED : அக் 23, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.

கோயிலில் காலை 7:00 மணிக்கு கம்பத்தடி மண் டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்கை விநாயகர் முன்பு யாக பூஜை நடந்தது.

தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜை முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.

சுவாமிக்கு காப்பு கட்டுதல் முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்ஸவர் சுப்பிர மணிய சுவாமி, தெய் வானைக்கு காப்பு கட்டப் பட்டது. திருவிழா நம்பியார் சிவாச் சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு விரதம் மேற் கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர்.

காப்பு கட்டிய பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண் டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். தினமும் உச்சிகால பூஜை முடிந்த தும், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாறு, இரவில் பால் இலவசமாக வழங்கப் படும்.

சூரசம்ஹாரம் தினமும் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள் பாலிப்பர்.

தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடை பெறும். முக்கிய நிகழ்ச்சி யாக அக். 26ல் வேல் வாங்குதல், அக். 27ல் சூரசம்ஹார லீலை, அக். 28 காலையில் சுப்பிர மணிய சுவாமி, தெய்வானை சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள், கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன்பு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.

காப்பு கட்டும் நிகழ்ச்சி யில் கோயில் அறங் காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, சண்முக சுந்தரம், தி.மு.க., மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி பங்கேற்றனர்.

பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் தனி சன்னதி யில் வள்ளி, தெய்வானை யுடன் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து சந்தனக்காப்பு அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது. சஷ்டி திருவிழா நடைபெறும் 7 நாட் களிலும் சிறப்பு அலங் காரம் அக்.28 அன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் சஷ்டி திருவிழா துவங்கும் வகையில் நேற்று மூலவர் முருகப் பெருமானுக்கு மஹா அபிஷேகம், உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகப் பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்கந்த ஹோமம், சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை நடந்தது. 27ல் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம், 28ல் சீர்தட்டு அழைத்தல், திருக்கல் யாணம் நடக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us