Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே

ADDED : செப் 03, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
வீணாகும் குடிநீர்

மதுரை பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து குடிநீர் கழிவு நீருடன் கலந்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக் கேடு உண்டாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இளங்கோவன், பைபாஸ் ரோடு.

திறந்தநிலையில் வடிகால்

மதுரை மகால் ரோட்டில் மழைநீர் வடிகால் துார்வாருவதற்காக தோண்டியபோது, குடிநீர் இணைப்புகள் சேதமாகி விட்டன. துார்வாரும் பணிகள் பாதியில் நிற்பதால், ஏழு அடி ஆழத்திற்கு பள்ளம் திறந்த வெளியில் உள்ளது. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வினோத், மகால் ரோடு .

சுகாதாரக்கேடான கால்வாய்

எல்லீஸ் நகர் குடும்பக்கட்டுப்பாடு அலுவலகம் அருகே உள்ள கிணற்றில் மாநகராட்சி, தனியார் கழிவுநீர் வாகனங்கள் கழிவை கொட்டுகின்றன. அருகில் உள்ள குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு உண்டாகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பூமிநாதன், எல்லீஸ் நகர்.

மோசமான ரோடு

மதுரை முனிச்சாலை முதல் அனுப்பானடி வளைவு வரை 2 கி.மீ. துாரத்திற்கு ரோடு மிக மோசமாக உள்ளது. மழை நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ரோட்டை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நீலகண்டன், கீழவாசல்.

மூடப்படாத பள்ளம்

மதுரை அவனியாபுரம் காவேரி தெருவில் யாரும் செல்ல முடியாத வகையில் தோண்டிய பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், அவனியாபுரம்.

கொசு உற்பத்தி கால்வாய்

தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெரு அருகிலுள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அருகில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நாகசுப்பிரமணியன், மருதுபாண்டியர் தெரு.

தேங்கும் கழிவுநீர்

மதுரை நடராஜ் நகர், எடிசன் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் கவனிப்பார்களா.

- செண்பகவேல், நடராஜ் நகர்.

கோயிலைச் சுற்றி குப்பை

மதுரை கூடலழகர் கோயிலைச் சுற்றி குப்பை நிறைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- லெட்சுமணன் மணி, எஸ்.எஸ்.காலனி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us