Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மே 14 முதல் உசிலம்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி

மே 14 முதல் உசிலம்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி

மே 14 முதல் உசிலம்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி

மே 14 முதல் உசிலம்பட்டி தாலுகாவில் ஜமாபந்தி

ADDED : மே 10, 2025 06:13 AM


Google News
உசிலம்பட்டி; உசிலம்பட்டி தாலுகா அளவிலான ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமையில் மே 14 முதல் 22 வரை நடக்கிறது.

மே 14ல் கருமாத்துார், கோவிலாங்குளம், விக்கிரமங்கலம், பன்னியான், முதலைக்குளம், கண்ணனுார், புள்ளநேரி, பானா மூப்பன்பட்டி, எரவார்பட்டி, சக்கரப்பநாயக்கனுார். மே 15ல் வாலாந்துார், பாப்பாபட்டி, அய்யனார்குளம், ஜோதிமாணிக்கம், கொடிக்குளம், போடுவார்பட்டி, சடச்சிபட்டி, ஆ.புதுப்பட்டி, சிறுபட்டி, ஆ.கிருஷ்ணாபுரம், வின்னகுடி, குறவகுடி.

மே 16ல் சிந்துபட்டி, தும்மக்குண்டு, டி.பெருமாள்பட்டி, வேப்பனுாத்து, திடியன், செம்பட்டி, ஆரியபட்டி, பொட்டுலுப்பட்டி, கட்டக்கருப்பன்பட்டி, பூதிப்புரம், நாட்டாமங்கலம், மேட்டுப்பட்டி, மே 20ல் உத்தப்பநாயக்கனுார், கல்லுாத்து, திம்மநத்தம், நடுப்பட்டி, சீமானுாத்து, மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, சிக்கம்பட்டி.

மே 22ல் உசிலம்பட்டி, நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனுார், போத்தம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, அல்லிகுண்டம், தும்மலப்பட்டி, மானுாத்து, எருமார்பட்டி, ஜோதில்நாயக்கனுார், வகுரணி, அயன்மேட்டுப்பட்டி.

பட்டா மாறுதல், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றிற்கு ஜமாபந்தியில் மனு கொடுத்து தீர்வுகாணலாம் என உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us