ADDED : ஜூன் 27, 2025 05:33 AM
சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை அருகே எம்.எல்.ஏ வெங்கடேசன் ஏற்பாட்டில் புதிதாக அமைத்த மின்மாற்றியை துவக்கி வைத்தார்.
செயற்பொறியாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சவுந்தரராஜன், உதவி மின் பொறியாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.