Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அழகன்குளம் அகழாய்வு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அழகன்குளம் அகழாய்வு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அழகன்குளம் அகழாய்வு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அழகன்குளம் அகழாய்வு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : மார் 28, 2025 04:54 AM


Google News
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க மியூசியம் அமைக்க தாக்கலான வழக்கில், மனுதாரரின் மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அழகன்குளம் அசோகன் தாக்கல் செய்த பொதுநல மனு: வைகை ஆறு வங்காள விரிகுடா கடலில் கலக்கும் பகுதி அருகே அழகன்குளம் உள்ளது. சங்க இலக்கியங்களில் பாடப் பெற்றுள்ளது. இங்கு 1986ல் அகழாய்வு நடந்தது. சங்ககால பானை ஓடுகள், ரோமானிய மது குடுவைகள், மீன், புறா, மயில் உருவ பானை ஓடுகள் கிடைத்தன. தொடர்ந்து பல கட்ட அகழாய்வில் ஹரப்பா நாகரிக உருவம் பொறிக்கப்பட்ட பகடைக்காய், விலை உயர்ந்த கல்மணி, சங்கு வளையல் துண்டுகள், பாண்டியர் கால நாணயங்கள், வீடுகளின் தரைத்தள பகுதி கண்டுபிடிக்கப்பட்டன. 2400 ஆண்டுகளுக்கு முன் அழகன்குளம் துறைமுகமாக விளங்கியுள்ளது.

கீழடிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அழகன்குளத்திற்கு தரவில்லை. 33 ஆண்டுகளாக தொடர் அகழாய்வு மேற்கொள்ளப்படும் ஊர் அழகன்குளம். இதுவரை அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சி மற்றும் ஆவணப்படுத்தவில்லை. அழகன்குளத்தில் மியூசியம் அமைத்து பாதுகாக்க வேண்டும். 2016-17 ல் நடந்த அகழாய்வின் அறிக்கையை வெளியிடக்கோரி மத்திய தொல்லியல்துறை இயக்குனர், தமிழக தொல்லியல்துறை கமிஷனர், ராமநாதபுரம் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us