ADDED : மார் 17, 2025 05:49 AM
திருப்பரங்குன்றம், : மதுரை விராட்டிபத்து ஓம் சாதனா மத்தியப் பள்ளியில் தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் கண்ணன் சசிரேகா தலைமை வகித்தார்.
இயக்குனர் நடன குருநாதன், முதல்வர் பரமகல்யாணி, மழலையர் பிரிவு துணை முதல்வர் சோனிகா முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன், அவர்களது தாத்தா பாட்டிகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர் சாய் துவாரகேஷ் நன்றி கூறினார்.