ADDED : செப் 04, 2025 05:00 AM
மதுரை: மதுரையில் மதிப்பீட்டாளர் கழகம் சார்பில் புவியியல் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்.,) அடிப்படையிலான கருவிகள் குறித்த கருத்தரங்கு கிளைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது.
பாலாஜி குழுமத்தை சேர்ந்த பாலாஜி, ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பம் சொத்து மதிப்பீட்டில் எவ்வாறு துல்லியத்தையும் வேகத்தையும் கூட்டுகிறது. நில அளவீடு, புவியியல் தரவுகள், நகர வளர்ச்சித் திட்டங்களில் மதிப்பீட்டாளர்களுக்கு அது வழங்கும் வலுவான ஆதரவுகள் குறித்து பேசினார். ஜி.ஐ.எஸ்., அடிப்படையிலான கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் மதிப்பீட்டாளர்களின் அறிக்கைகள் சர்வதேச தரத்தில் அமையலாம் என்றார்.