ADDED : பிப் 25, 2024 04:53 AM
சோழவந்தான், : சோழவந்தான் ஆர்.எம்.எஸ்., காலனியில் விடியல் கல்வி அறக்கட்டளை, பழநி ஆயக்குடி மக்கள் மன்றம், வித்யாதரன் நினைவு அறக்கட்டளை, மதுரை ப்ளாசம் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
நிர்வாக டிரஸ்டி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். டிரஸ்டிகள் ஆறுமுகம், செல்வம், வருமான வரித்துறை அதிகாரி ரவிராமச்சந்திரன், கற்பகம் அறக்கட்டளை அருணா ராஜ்மோகன், திருநகர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் தாண்டவம், ஆசிரியர் மதன்மோகன், குடியிருப்பு நலச்சங்கத் தலைவர் செல்வம் பங்கேற்றனர். நிர்வாகி செந்தில்குமார் நன்றி கூறினார்.