ADDED : மார் 26, 2025 03:47 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண்மை துறை அட்மா திட்டம் சார்பில் விளாச்சேரியில் பயோ பிளாக் மீன் பண்ணை அமைத்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
உள்நாட்டு மீன் வளர்ப்பு குறித்து மீன்வள ஆய்வாளர் வீரக்குமார் பேசினார். வேளாண் அலுவலர் அருள் நவமணி, விஜயபாரதி வேளாண்மை திட்டங்கள் குறித்து விளக்கினர். உதவி அலுவலர் மீனாகுமாரி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் மகாலட்சுமி, அழகர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.