ADDED : ஜூன் 25, 2025 08:28 AM

அ நிறம் | அளவு
மேலுார் : ஆட்டுக்குளம் ஊராட்சி குடியிருப்புகளுக்கு புதிய கதவு எண் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆதார், ரேஷன் கார்டு உட்பட 17க்கும் மேற்பட்ட ஆவணங்களில் மாற்ற வேண்டியதிருப்பதால் பழைய எண்ணை வழங்க வேண்டும் என மக்கள் மனு கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால் நேற்று சிவகங்கை ரோட்டில் உள்ள ஆட்டுக்குளம் விலக்கில் உண்ணாவிரதம் இருந்தனர். பி.டி.ஓ., (பொறுப்பு) ராஜசேகர் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


