Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பேரையூரில் மழைக்காக காத்திருக்கும் விளைநிலங்கள்

பேரையூரில் மழைக்காக காத்திருக்கும் விளைநிலங்கள்

பேரையூரில் மழைக்காக காத்திருக்கும் விளைநிலங்கள்

பேரையூரில் மழைக்காக காத்திருக்கும் விளைநிலங்கள்

ADDED : மே 29, 2025 01:53 AM


Google News
பேரையூர்:பேரையூர் பகுதியில்போதிய மழை இன்றி தொடரும் மேகமூட்டத்தால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

பேரையூர், சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, சாப்டூர், அத்திபட்டி பகுதிகளில் 4 நாட்களாக மேகமூட்டம் நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளனர். கோடை சாகுபடி ஆயத்த பணிகளில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பெரும்பாலான இடங்களில் உழவுப் பணிகளை முடித்து நிலத்தை தயார்படுத்தி கோடை மழையை எதிர்நோக்கி உள்ளனர்.

வெப்ப சலன சுழற்சி, மழை தொடர்பான அறிவிப்புகள் சில நாட்களாக தொடர்கின்றன. இதனால் கோடை மழையை எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us