/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது
மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது
மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது
மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது

பூஜைக்கு ரூ.5 லட்சம்
சென்னை திரும்பிய அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, 'என் குருஜி சிவக்குமார் மானாமதுரையில் உள்ளார். அவரை சந்தித்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்' என்றார். 'உடனடியாக மதுரைக்கு வரமுடியாது' என்ற அங்கையற்கண்ணியிடம் 'பரவாயில்லை. பூஜைக்குரிய செலவுகளை மட்டும் ஜி பேயில் அனுப்புங்கள். உங்கள் வீட்டின் அடியில் வராஹி அம்மன் சிலை உள்ளது. அதன் மீது நீங்கள் நடப்பதால்தான் உங்களுக்கு பிரச்னை ஏற்படுவதாக குருஜி கூறினார். அந்த சிலையை எடுக்கும் பூஜைக்கு ரூ.15 லட்சம் செலவாகும்' என உஷா கூற, அங்கையற்கண்ணி அதிர்ச்சி அடைந்தார்.
மாட்டுத்தாவணியில் சுற்றிவளைப்பு
இதற்கிடையே வீட்டில் இருந்த நகைகள் மாயமானது குறித்து அங்கையற்கண்ணியிடம் மகள் கேட்க, மாந்திரீகம் விபரங்களை கூறி அதற்கு கொடுத்ததாக கூறினார். அதேநேரம் அங்கையற்கண்ணியை தொடர்பு கொண்ட உஷா, மேலும் ரூ.2 லட்சம் பூஜைக்கு தேவைப்படுகிறது எனக்கூறினார். நேரில் தருவதாக கூறி தாயும், மகளும் மதுரை வந்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அறிவுரைபடி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு உஷாவை அங்கையற்கண்ணி வரவழைத்தார். அவரிடம் இருந்து உஷா பணம் பெற்ற போது இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ.,தியாகப்ரியன் மற்றும் போலீசார் சுற்றிவளைத்தனர்.
நகை, பணம் மீட்பு
விசாரணையில் உஷாவின் உண்மையான பெயர் சுடலையம்மாள் 35, எனத்தெரிந்தது. அவரது தகவலின்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் குறி சொல்லும் சிவக்குமாரை 41, போலீசார் விசாரித்தபோது, பலரிடம் மாந்திரீகம் செய்வதாக கூறி, நகை பணம் மோசடி செய்தது தெரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் அருகே சூடியூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டு 15 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்தை போலீசார் மீட்டனர். சிவக்குமாரும், சுடலையம்மாளும் கைது செய்யப்பட்டனர்.