/உள்ளூர் செய்திகள்/மதுரை/விஜயகாந்திற்கு சிலை வைக்க கலெக்டரிடம் தே.மு.தி.க., மனுவிஜயகாந்திற்கு சிலை வைக்க கலெக்டரிடம் தே.மு.தி.க., மனு
விஜயகாந்திற்கு சிலை வைக்க கலெக்டரிடம் தே.மு.தி.க., மனு
விஜயகாந்திற்கு சிலை வைக்க கலெக்டரிடம் தே.மு.தி.க., மனு
விஜயகாந்திற்கு சிலை வைக்க கலெக்டரிடம் தே.மு.தி.க., மனு
ADDED : ஜன 03, 2024 06:31 AM
மதுரை: மதுரை வடக்கு மாசி வீதி - மேலமாசிவீதி சந்திப்பில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சிலை வைக்க அனுமதி கேட்டு மதுரை கலெக்டரிடம் தே.மு.தி.க., நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
மதுரை நகர் வடக்கு, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் மோகன், பத்மநாபன், கோவிந்தராஜ், சேகர் உள்பட பலர் மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் நேற்று மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறுகையில், ''தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மதுரையைச் சேர்ந்தவர். அவரது திருமணம், மன்றம், இயக்கம், அனைத்து தொகுதி வேட்பாளர்களுடன் சந்திப்பு என எல்லாமே இங்குதான் நடந்தது. அவரது முழுஉருவ வெண்கலச் சிலையை வைப்பதற்கு மதுரை மேலமாசி, வடக்கு மாசி வீதிகள் சந்திப்பு உட்பட 3 இடங்களில் அனுமதி கேட்டுள்ளோம். அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுபோல மாநகராட்சி மேயர், கமிஷனரிடமும் மனு கொடுக்க உள்ளோம். எங்களுக்கு முன்பாகவே இதே கோரிக்கையை வலியுறுத்திய மாணிக்தாகூர் எம்.பி.,க்கு நன்றி தெரிவிக்கிறோம்'' என்றனர்.