Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்

நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்

நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்

நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 09, 2025 04:21 AM


Google News
Latest Tamil News
மதுரை: நாட்டுமாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாடுகள் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

சினை ஊசி மூலமே கருத்தரிப்பு நடந்தால் நாட்டு மாடுகள் அழியும். எனவே அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சங்கம் சார்பில் தலைவர் ராஜிவ்காந்தி, நிர்வாகி செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில் புலிக்குளம் கிடைமாடு மேய்ச்சல் சங்கம், நாட்டுமாடு நலச்சங்கம் ஆகியவையும் கலந்து கொண்டன.

நாட்டு மாடு நலச்சங்க தலைவர் கலைவாணன், செயலாளர் ஆவி கூறுகையில், ''மாடுகள் இனப்பெருக்க தடைச்சட்டத்தால் நாட்டு மாடுகள் அழியும். நாட்டு மாடுகளை பாதுகாக்க நடக்கும் எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவு தருவோம்'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us