2ம் பரிசு கேட்டு மாடுபிடி வீரர் மனு
2ம் பரிசு கேட்டு மாடுபிடி வீரர் மனு
2ம் பரிசு கேட்டு மாடுபிடி வீரர் மனு
ADDED : ஜன 19, 2024 05:14 AM
மதுரை: மதுரை அவனியாபுரம் ரஞ்சித்குமார். கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் 2019 முதல் 2024 வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்றேன். கடந்த ஜன.,15ல் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் பங்கேற்று 14 மாடுகளை அடக்கி 2ம் இடம் பிடித்தேன். ஆனால் எனக்கு பரிசு அறிவிக்கப்படவில்லை. ஆவணங்களின் படி அதற்கான சான்றும், பரிசும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


