ADDED : செப் 16, 2025 04:32 AM
மேலுார்: மேலுார் கூட்டுறவு நகர வங்கி பொது பேரவை கூட்டம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சதீஷ்குமார் தலைமையில் நடந்தது.
சிறந்த வைப்புதாரர்கள், வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் கவுரவிக்கப்பட்டனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு வழங்கியவர்களுக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
துணை பதிவாளர் காயத்ரி, மேலுார் நகர வங்கி மேலாண்மை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், மேலாளர் பாஜித் முகமது கலந்து கொண்டனர். உதவி மேலாளர் விக்னேஷ் ராஜ் நன்றி கூறினார்.