ADDED : மே 31, 2025 05:10 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் இன்று(மே 31) ஓய்வுபெறும் நிலையில் நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்சஒழிப்பு போலீசாரின் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் அவரை 'சஸ்பெண்ட்' செய்து கல்லுாரிக்கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி உத்தரவிட்டார். பொறுப்பு முதல்வராக மூத்த பேராசிரியர் கண்ணபிரான் நியமிக்கப்பட்டுள்ளார்.