ADDED : ஜூன் 04, 2025 01:27 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் செம்மொழி நாள் விழா நடந்தது. மாணவி அபூர்வா வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார்.
கல்வி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். வக்பு வாரியக் கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர், மதுரைக் கல்லுாரி அலுவலர் ஓய்வு கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் கபிலன் நன்றி கூறினார். பல்வேறு கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.