/உள்ளூர் செய்திகள்/மதுரை/கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம் கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்
கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்
கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்
கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்

வருவாய் இல்லை
ஜல்லிக்கட்டு மைதானம் தவிர பார்வையாளர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு தொடர்பான சிற்பங்கள், 90 பேர் அமரும் வகையில் உள்ள தியேட்டரில் ஜல்லிக்கட்டு குறித்த படம் பார்க்கும் வசதி, நுாலக வசதி, ஜல்லிக்கட்டு தொடர்பான இரண்டு மியூசியங்கள் உள்ளன. ஆண்டுமுழுவதும் இதை பயன்படுத்த இலவச அனுமதி உண்டு. அதேசமயம் மைதானத்தில் கட்டுப்பாடு இல்லாததால் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும் பொருட்களை சேதப்படுத்துவது யாரென்று கண்டறிய முடியவில்லை. ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்கு காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இலவச அனுமதி என்பதால் வருவாய்க்கு வழியில்லை.
போக்குவரத்து வசதி இல்லை
அலங்காநல்லுாரில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த ஸ்டேடியம். பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து அலங்காநல்லுார் வழி வாடிப்பட்டி செல்லும் அரசு பஸ்கள் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு முன்பாக மாற்றுவழியில் செல்கிறது. இதனால் பஸ்சில் வரும் பயணிகள் வெயில், மழையின் போது ஒதுங்க வழியின்றி நடந்தே ஸ்டேடியம் வருகின்றனர். வாடிப்பட்டி செல்லும் பஸ்களை உட்புற ரோட்டில் ஸ்டேடியம் வரை சென்று திருப்பி விடப்பட்டால் பார்வையாளர்கள் வந்து செல்வது எளிது. திருவிழாவின் போது மட்டும் பஸ் நின்று செல்வதற்கு பதிலாக ஆண்டுதோறும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதை பராமரிக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இதற்கான ஏற்பாடுகளை முழுமையாக செய்தால் தான் பாழடைந்து போகாமல் தொடர்ந்து பாதுகாக்க முடியும்.