ADDED : செப் 28, 2025 02:45 AM
மதுரை: மதுரை பெத்தானியாபுரம் ஜானகி. இவர் ஐ.என்.டி.யூ.சி., காலனி ஜீவபெருமாள் நடத்திய சிறுசேமிப்பு திட்டத்தில் ரூ.3.55 லட்சம் செலுத்தினார்.
கடைசி சீட்டில் இவருக்கு தரவேண்டிய ரூ.5 லட்சத்தை தராமல் குடும்பத்துடன் தலைமறைவானார். இதுபோல் பலரிடமும் மோசடி செய்துள்ளதாக ஜானகி புகாரில் ஜீவபெருமாள், மனைவி செல்வராணி, 2 மகள்கள், மருமகன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


