ADDED : ஜூன் 02, 2025 01:04 AM
திருப்பரங்குன்றம்: விளாச்சேரியில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை துவக்க விழா நடந்தது.
அட்மா வட்டார விவசாயிகள் குழு தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். இம்முகாம் மாதம் தோறும் 2 வது, 4 வது வெள்ளிக் கிழமைகளில் ஒவ்வொரு கிராமமாக நடத்தப்படும் என திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் துறையின் திட்டங்களை எடுத்துரைத்தனர். வேளாண் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டன.