ADDED : செப் 26, 2025 04:43 AM
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ரூ.2.74 கோடியில் சீரமைக்கும் பணி மே மாதம் தொடங்கப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று நகராட்சி தலைவர் ரம்யா திறந்து வைத்தார். கமிஷனர் அசோக் குமார், துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் ரம்ஜான் பேகம், சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.