ADDED : பிப் 11, 2024 12:45 AM
மேலுார்: கோட்டநத்தம்பட்டி பால் வேன் டிரைவர் பாண்டி 40. இவர் பிப்.,5 காணாமல் போனார்.
சொத்து பிரச்னையில்இவரது அண்ணன் மனைவி ரூபதி, இரண்டாவது கணவர் கார்த்திகேயன் மற்றும் உறவினர்கள் கொலை செய்தது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அடையாளம்காணக்கூடாது என்பதற்காக தலை, கால்களை வெட்டி எரித்துள்ளனர். கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதால் கூலிப்படையை கொண்டு கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.