Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வரி விதிப்பு முறைகேடு5 பேருக்கு ஜாமின் அனுமதி

வரி விதிப்பு முறைகேடு5 பேருக்கு ஜாமின் அனுமதி

வரி விதிப்பு முறைகேடு5 பேருக்கு ஜாமின் அனுமதி

வரி விதிப்பு முறைகேடு5 பேருக்கு ஜாமின் அனுமதி

ADDED : செப் 11, 2025 11:31 PM


Google News
மதுரை:மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு வழக்கில் கைதானவர்களில் உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன் உட்பட 5 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது.இதுதொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி மதுரை டி.ஐ.ஜி.,அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 23 பேர் கைதாகினர். இவர்களில் கம்ப்யூட்டர் புரோகிராம் உதவியாளர்கள் ரவி, கருணாகரன், ஒப்பந்த ஊழியர்கள், புரோக்கர்கள் உட்பட 9 பேருக்கு உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது.

கைதான மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த், பில்கலெக்டர் ரவிச்சந்திரன் ஜாமின் மனுவை மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.

கைதான ஓய்வு பெற்ற மாநகராட்சி உதவி பொறியாளர் ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஒப்பந்த பணியாளர் செந்தில் பாண்டியன், ஜமால் நஜீம் (ரவிச்சந்திரனுக்கு கீழ் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டவர்), மாநகராட்சி வரிவிதிப்புக்குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், வழக்கறிஞர்கள் முத்துசரவணன், சிவசுப்பிரமணியன், முத்துமாரி ஆஜராகினர். அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி மனுதாரர்களுக்கு ஜாமின் அனுமதித்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us