ADDED : ஜூன் 27, 2025 12:41 AM
திருமங்கலம்: திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், நான்கு சக்கர வாகன, டாக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் சந்தைப்பேட்டை வரை சென்றது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நவாசுதீன், எஸ்.ஐ.,கள் பாரதி, நாகராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.