ADDED : ஜூன் 14, 2025 05:31 AM
மதுரை: மதுரை சேவாலயம் மாணவர் விடுதியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
கல்வி, அறிவாற்றல், நட்பு, உதவி, இயற்கை நலன் உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.
விடுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், அறிவழகன் உடன் இருந்தனர்.