ADDED : ஜன 23, 2024 04:49 AM
திருமங்கலம்: கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் நடந்தது.
தாசில்தார் மனேஷ் குமார், நகராட்சி தலைவர் ரம்யா, பொறியாளர் ரத்தினவேலு, தீயணைப்பு அலுவலர் முத்துராமன், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதிகை சிலம்பாட்ட பயிற்சி மைய நிறுவனர் பாக்கியராஜ் தலைமையில் மாணவர்கள் சிலம்பம், கத்திச்சண்டை, சுருள் கத்தி விளையாடி திறமையை வெளிப்படுத்தினர்.


