ADDED : ஜூன் 03, 2025 01:00 AM

அவனியாபுரம்: மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணி 31. கறிக்கடை ஊழியர். நேற்று முன்தினம் இரவு போதையில் அப்பகுதி மின்வாரிய அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த டூ வீலர், சரக்கு வாகனத்தில் தீ வைத்துள்ளார்.
வாகன உரிமையாளர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். மணியை போலீசார் கைது செய்தனர்.