/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மரங்கள் அறியும் பயணம்: மரபு நடை பயணம் மரங்கள் அறியும் பயணம்: மரபு நடை பயணம்
மரங்கள் அறியும் பயணம்: மரபு நடை பயணம்
மரங்கள் அறியும் பயணம்: மரபு நடை பயணம்
மரங்கள் அறியும் பயணம்: மரபு நடை பயணம்

130 இடங்களில் 'ட்ரீ வாக்'
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதற்கான முயற்சிகளை 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். ஆண்டுதோறும் 5000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் எங்கள் இலக்கு. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தில் நகரம், கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கன்றுகள் வழங்குகிறோம். திருப்பரங்குன்றத்தில் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் செல்லும் ரோட்டில் உள்ள மயானத்தின் பின்பகுதியில் ஒரு ஏக்கரில் 1300 கன்றுகளை நடவு செய்தோம். இடையபட்டி போலீஸ் பயிற்சி மையத்தில் 6500 மரக்கன்றுகள் வழங்கினோம். அவர்கள் அதை பராமரிப்பதால் வனம் போல உருவாகி விட்டது. தானம் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறோம்.
மருதம், கடம்பத்திற்கு சிறப்பு
இந்தாண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் மதுரையின் பாரம்பரிய மருதம், கடம்ப மரங்களை வழங்க உள்ளோம். மரங்களை காக்கும் உணர்வை மீண்டும் கொண்டு வர நடைபயணம் மேற்கொள்கிறோம். மாதந்தோறும் 3வது ஞாயிறு அன்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கோயில் காடுகள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் பராமரிக்கும் வனங்களுக்கு 15ஆயிரத்திற்கு மேற்பட்டோரை அழைத்துச் செல்கிறோம். காடுகள் இருப்பதால் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன என்பதால் எந்த வகை காடாக இருந்தாலும் பாதுகாக்க வேண்டும். 'ட்ரீ வாக்' வர விரும்புபவர்களை வேன் மூலம் இலவசமாக அழைத்துச் செல்கிறோம் என்றார். அலைபேசி: 91591 53233.
ஆவணப்படுத்துவதும் முக்கியமே
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் விஸ்வநாத்: