Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டூவீலர் - ஆட்டோ மோதல் 4ம் வகுப்பு மாணவி பலி

டூவீலர் - ஆட்டோ மோதல் 4ம் வகுப்பு மாணவி பலி

டூவீலர் - ஆட்டோ மோதல் 4ம் வகுப்பு மாணவி பலி

டூவீலர் - ஆட்டோ மோதல் 4ம் வகுப்பு மாணவி பலி

ADDED : மார் 20, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டூவீலர் - ஆட்டோ மோதியதில் பள்ளிக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவி ரித்திகா பலியானார்.

வடுகபட்டி நித்யா நகரில் ஆடு வளர்க்கும் தொழில் செய்பவர் பூமிராஜன். இவருக்கு மனைவி ஜோதி, 2 மகள்கள் உள்ளனர். உசிலம்பட்டி ஆர்.சி., பள்ளியில் மூத்த மகள் 8ம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகள் ரித்திகா 9, நான்காம் வகுப்பு படித்தார்.

நேற்று காலை 8:40 மணிக்கு அக்கா, தங்கை இருவரும் மதுரை ரோட்டில் இருந்து உசிலம்பட்டிக்கு டிரைவர் ராஜா 22, ஓட்டி வந்த ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்றனர்.

அப்போது கருமாத்துார் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர் பண்ணைப்பட்டி பிரதீப்குமார் 21, ஓட்டி வந்த டூவீலர், ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரித்திகா சம்பவ இடத்திலேயே இறந்தார். சகோதரி லேசான காயமடைந்தார். பிரதீப்குமார் தலையில் பலத்த காயமுற்று சிகிச்சை பெறுகிறார்.

உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us