ADDED : ஜூன் 07, 2025 04:48 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று 35 பேர் புறநோயாளியாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். குழந்தைகள் உட்பட 35 பேர் பல்வேறு வார்டுகளில் காய்ச்சலுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி மதுரையில் நேற்று 17 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 31 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று, டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை.