ADDED : ஜூன் 07, 2024 06:27 AM
விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., வல்லரசு நினைவு கோப்பைக்கான வட்டார அளவிலான இறகு பந்தாட்ட போட்டி 2 நாட்கள் நடந்தது. பரிசளிப்பு விழாவிற்கு இறகு பந்தாட்ட குழு தலைவர் ஏ.வி. பாண்டியன் தலைமை வகித்தார்.
கே.பி. பாண்டியன், கராத்தே மாஸ்டர் ஜோதிராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் சாமி, வக்கீல் இளையரசு முன்னிலை வகித்தனர்.
இறகு பந்தாட்ட குழு செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார்.
15 வயது பிரிவில் தீஷா, தன்யா, வர்ஷா முதல் 3 இடங்களை பிடித்தனர். 13 வயது ஆண்கள் பிரிவில் ஜெயகிருஷ், முகேஷ், ஜெயாஷ் 3 இடங்களை பிடித்தனர். 15 வயது ஒற்றையர் ஆண்கள் பிரிவில் ரூபன் ருத்ரா, மித்லேஷ், சிவா ஜெயகிருஷ் வெற்றி பெற்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், ஊராட்சி தலைவர் கலியுகநாதன் பரிசு வழங்கினர். நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.