ADDED : ஜூன் 29, 2024 04:36 AM
திருப்பரங்குன்றம், ; சூரக்குளத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை திட்டம் (அட்மா), கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரீப் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் கோகிலா சக்தி துணை அலுவலர் சுருளீஸ்வரன் பங்கேற்றனர். தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி அலுவலர் ஆறுமுகம், உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.