ADDED : ஜூலை 10, 2024 04:57 AM
மதுரை, : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் திருவடி பிரார்த்தனை நடந்தது. வள்ளலார் அருளிய திருவடி புகழ் மாலை, திருவடிப் பெருமை பதிகங்கள், திருநாவுக்கரசர் அருளிய திருவடி தண்டகம், மாணிக்கவாசகர் அருளிய போற்றி திரு அகவல், சுந்தரர் அருளிய திருத்தொண்ட தொகை, ஆச்சாரிய சுவாமிகள் அருளிய அஷ்டகம் பாராயணம் செய்யப்பட்டது.
சன்மார்க்க சேவகர் ராமநாதன் பிரார்த்தனையை நடத்தினார். ரத்னேஸ்வரி ஆராதனை செய்தார்.