ADDED : ஜூன் 04, 2024 06:26 AM

மேலுார்: கன்னியாகுமரி களியக்காவிளை ஜஸ்டின் 43. உறவினர்கள் 17 பேருடன் வேளாங்கண்ணி சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பினர். கன்னியாகுமரி ஜெபன் 33, ஓட்டினார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மதுரை மேலுார் தும்பைபட்டி நான்கு வழிச்சாலையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஜஸ்டின் இறந்தார். 17 பேர் காயமுற்றனர். எஸ்.ஐ., ரமேஷ்பாபு விசாரிக்கிறார்.