Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டி.இ.டி.,யை தகுதியாக கொள்ள கூடாது ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டி.இ.டி.,யை தகுதியாக கொள்ள கூடாது ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டி.இ.டி.,யை தகுதியாக கொள்ள கூடாது ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டி.இ.டி.,யை தகுதியாக கொள்ள கூடாது ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்

ADDED : ஜூன் 18, 2024 05:10 AM


Google News
மதுரை, : 'ஆசிரியர் பதவி உயர்வுக்கு டி.இ.டி.,யை (ஆசிரியர் தகுதி தேர்வு) தகுதியாக கொள்ளக்கூடாது. இவ்விஷயத்தில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (என்.சி.டி.இ.,) வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்' என தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:

கல்வித்துறையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க, நடு, உயர்நிலை தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்காக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தகுதியுள்ளவர்களாக உள்ளனர். தமிழக அரசு பதவி உயர்வு வழங்க தயாராக இருந்தும் பதவி உயர்வுக்கு டி.இ.டி., தகுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது.

இதுதொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது, '23.8.2010க்கு முன் நியமனம், டி.இ.டி., விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பதி உயர்வுக்கு டி.இ.டி., தேவையில்லை எனவும், 23.8.2010க்கு பின் நியமனம் ஆன ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு டி.இ.டி., அவசியம்' என என்.சி.டி.இ., தெளிவுபடுத்தி உள்ளது.

என்.சி.டி.இ.,யின் இந்த வழிகாட்டுதலை தமிழக அரசு ஏற்று, 'பதவி உயர்வுக்கு டி.இ.டி., இல்லை என உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில்' வலியுறுத்த வேண்டும். மேலும் பிரதான வழக்கு முடியும் வரை தமிழக அரசு இடைக்கால உத்தரவு பெற்று தமிழகத்தில் பட்டதாரி, துவக்க, நடு, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை இந்தாண்டாவது நடத்த வேண்டும். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவர்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு மட்டும் டி.இ.டி., அவசியம் என்ற நடைமுறையை வழக்கம்போல் பின்பற்றினாலும், பதவி உயர்வு என வரும்போது டி.இ.டி., அவசியம் இல்லை என்பதில் இருந்து தமிழக அரசு பின்வாங்காத நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us