ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு
ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு
ADDED : ஜூலை 03, 2024 05:50 AM

மதுரை : மதுரையில் ஸத்குரு சங்கீத சமாஜம் சார்பில் ஜூலை 6 முதல் 8 வரை மூன்று நாட்கள் தாமல் ராமகிருஷ்ணனின், ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது. தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில் மூன்று நாட்களும் மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ராமாயணம், பாகவதம், நாராயணீயம் போன்றவற்றை எளியமுறையில் சொற்பொழிவாற்றி வருகிறார் தாமல் ராமகிருஷ்ணன். இவரது ஆன்மிக ஆர்வத்தை காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளே பாராட்டியுள்ளார்.
இவரது சொற்பொழிவு திறமையை பாராட்டிய குருவாயூர் தேவஸ்தானம், 'ஸ்ரீகுருவாயூரப்பன் பிரியதாசன்' என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.